மராட்டிய மாநிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரிடம் இருந்து ஒரு கடிதம் சிக்கியுள்ளது.
மராட்டிய மாநிலம், மும்பை குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியே இருக்கும் பாலத்தின் அருகே நேற்று காலை இளைஞர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது.
இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதே சமயம், உயிரிழந்த இளைஞரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டறிந்தனர். அதில், “விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை; அதனால் தான் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்தேன்” என எழுதப்பட்டுள்ளது.
இதனை வைத்து மேலும் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் லட்சுமி சைத்ராம் (25) என்பதும் தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லட்சுமி சைத்ராம் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்; மதுரையில் அதிர்ச்சி!