Monday, March 25, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியா'விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை' - தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர்!

    ‘விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை’ – தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர்!

    மராட்டிய மாநிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இளைஞரிடம் இருந்து ஒரு கடிதம் சிக்கியுள்ளது. 

    மராட்டிய மாநிலம், மும்பை குர்லா ரயில் நிலையத்திற்கு வெளியே இருக்கும் பாலத்தின் அருகே நேற்று காலை இளைஞர் ஒருவரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டது. 

    இதையடுத்து இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அதே சமயம், உயிரிழந்த இளைஞரின் சட்டை பையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டறிந்தனர். அதில், “விமானத்தை பார்ப்பதே கடைசி ஆசை; அதனால் தான் ஞாயிற்றுக்கிழமை விமானம் மூலம் மும்பை வந்தேன்” என எழுதப்பட்டுள்ளது.

    இதனை வைத்து மேலும் விசாரணை நடத்தியதில், அந்த இளைஞர் சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் லட்சுமி சைத்ராம் (25) என்பதும் தெரியவந்தது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் லட்சுமி சைத்ராம் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

    அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞர்; மதுரையில் அதிர்ச்சி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....