Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'விக்னேஷ் சிவனையும் , நயன்தாராவையும் கைது செய்யுங்க' எழுந்த புகார்; காரணம் இதுதான்!

    ‘விக்னேஷ் சிவனையும் , நயன்தாராவையும் கைது செய்யுங்க’ எழுந்த புகார்; காரணம் இதுதான்!

    விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முறையே இயக்கத்திலும் நடிப்பிலும் உச்சத்தை அடைந்து வருகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமீபத்தில் வந்த அறிவிப்பு ஒன்று விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்றே தோன்ற வைத்துள்ளது. 

    ஆம்! அஜித்குமார் அவர்களின் 62 வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்ற அறிவிப்புதான், விக்னேஷ் சிவனை உச்ச இயக்குனர் என்று அழைப்பதில் தவறில்லை என்ற எண்ணத்தை விதைத்துள்ளது. என்னை அறிந்தால் திரைப்படத்திலும், வலிமை திரைப்படத்திலும் பாடலாசிரியராக பணியாற்றிய விக்னேஷ் சிவன், அஜித்குமார் அவர்களின் 62 வது திரைப்படத்தில் இயக்குனராக பணியாற்ற இருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைப்பது அனைவரும் அறிந்ததே. விக்னேஷ் சிவனின் முன்னேற்றப் பாதை இப்படியாக இருக்கிறது. 

    லேடி சூப்பர் ஸ்டார் என்ற தகுதியான அடைமொழியுடன் வலம் வந்துக்கொண்டிருக்கும் நயன்தாராவிற்கு இருக்கும் ரசிக பட்டாளம் குறித்து எவரும் எவருக்கும் விளக்கத் தேவையில்லை என்ற ரீதியில்தான் நயன்தாராவின் மீதான ரசிகர்களின் அன்பு இருக்கிறது. திரைப்படத்திற்கு  திரைப்படம் நயன்தாராவின் வளர்ச்சியும் முன்னேற்றம் அடைந்துக் கொண்டிருக்கிறது. 

    மேலும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இதுவரையில் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நெற்றிக்கண் திரைப்படமும் ராக்கி திரைப்படமும் வெளிவந்திருக்கிறது. கூழாங்கல் திரைப்படம் வெளிவர காத்திருக்கிறது. கனெக்ட், ஊர்க்குருவி போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் இம்மாதம காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளிவர இருக்கிறது.

    இந்நிலையில், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரின் மீதும் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அப்புகாரின்படி, விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் தொடங்கியிருக்கும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஆம்!  ரவுடிகள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘ரவுடி பிக்சர்ஸ்’ என பெயர் வைத்திருப்பதா? என கேள்வியும், இது ரவுடிகளை ஊக்கப்படுத்தும் என்ற கருத்தும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்யவும் அந்தப் புகார் மனுவில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   

    இந்தச் சூழ்நிலையில், இணையத்தில் இந்தச் செய்தி  வேகமாக பரவ நெட்டிசன்கள் இப்புகார் குறித்து பல கேளிக்கைகளை உருவாக்கி வருகின்றனர். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் காரணமாகவே தயாரிப்பு நிறுவனத்திற்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....