Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பீஸ்ட் முன்னோட்டம் கொடுத்த மகிழ்வே முடியாத நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த மகிழ்வைத் தந்த விஜய்!

    பீஸ்ட் முன்னோட்டம் கொடுத்த மகிழ்வே முடியாத நிலையில், ரசிகர்களுக்கு அடுத்த மகிழ்வைத் தந்த விஜய்!

    மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு தளபதி விஜய் அவர்கள் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து தற்போது திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படம்தான், பீஸ்ட். வருகின்ற ஏப்ரல் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படமானது ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. 

    பீஸ்ட் முன்னோட்டம் 

    இந்நிலையில், கடந்த ஏப்ரல் இரண்டாம் தேதி மாலை ஆறு மணியளவில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் தமிழ் ட்ரைலர் தமிழ் திரையுலக ரசிகர்களிடத்தில் மீப்பெறும் பேசுபொருளாய் உருவாகியிருக்கிறது என்றால் அது மிகையாகாது.

    ட்ரைலர் வெளியாகும் முன்பே பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது உச்சத்தில் இருக்க, தற்போது ட்ரைலரைப் பார்த்த ரசிகர்களிடத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் இன்னும் அதிகரித்துள்ளது. 

    ஏற்கனவே, நெல்சன் திலீப்குமார் கூறியதைப்போலவே திரைப்படத்தின் கதை எளிமையானதுதான். ஆனால், அக்கதையை வைத்துக்கொண்டு திரைக்கதையில் நெல்சன் மிரட்டியிருப்பார் என்றே தோன்றுகிறது. ட்ரைலர் அந்த நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. 

    சாதனை

    ட்ரைலர் வெளியான 24 மணி நேரத்தில் 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று, பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் சாதனைப் புரிந்துவருகிறது. பலரையும் பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் கவர்ந்து வருகிறது. 

    இப்படியான சூழலில் தமிழ் தவிர பிற மொழிகளில் ட்ரைலர் எப்போது வெளிவரும் என்ற கேள்வி பலரிடத்தில் இருந்து வந்தது. அதற்கு பதில் தற்போது கிடைத்துள்ளது

    ஆம்! வெளிவந்துள்ள அறிவிப்பின்படி, பீஸ்ட் திரைப்படத்தின் தெலுங்கு ட்ரைலர் நாளை மாலை ஆறு மணிக்கு வெளியாகிறது. பீஸ்ட் திரைப்படத்தின் ஹிந்தி ட்ரைலர் இன்று மாலை ஐந்து மணிக்கும் வெளியாகிறது. 

    தமிழில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த அரபிக்குத்து பாடல் இன்று மாலை ஆறு மணியளவில் ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. 

    நேர்காணல் 

    பீஸ்ட் திரைப்படத்தின் புரோமஷன் பணிகளில் பெரியதாய் எவற்றையும் செய்யாத தயாரிப்பு நிறுவனம் திரைப்படத்தின் புரோமஷனுக்காக தற்போது செய்துள்ள ஒன்று அனைவரிடத்திலும் விருப்பையும், வியப்பையும் ஏற்படுத்தி வருகிறது. 

    பத்து வருடங்களுக்குப் பிறகு தளபதி விஜய் அவர்கள் தரவிருக்கும் நேர்காணல்தான், வியப்பையும் விருப்பையும் ஏற்படுத்தியிருக்கும் புரோமஷன். ஆம்! பீஸ்ட் திரைப்படத்திற்காக விஜய் அவர்கள் தந்துள்ள நேர்காணலானது வருகின்ற ஏப்ரல் 10 ஆம் தேதி சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. 

    விஜயுடன் நேருக்கு நேர் 

    இந்த நேர்காணலில், பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்  தொகுப்பாளாராக இருக்கிறார். நேர்காணல் சார்ந்து இதுவரை வெளிவந்துள்ள இரு புரோமக்களும் மக்களிடையை நல்ல வரவைற்பை பெற்று வருகிறது.

    வெளிவந்த புரோமக்களில் நெல்சன் திலீப்குமார் கேட்கும் கேள்விகளும், அதற்கு விஜய் கொடுக்கும் பாவனைகளும், பதில்களும் கலகலப்பாக இருக்கிறது. புரோமக்களைப் போன்றே நேர்காணலும் கலகலப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. இந்நிகழ்ச்சிக்கு விஜயுடன் நேருக்கு நேர் என்றுபெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    தளபதி விஜய் அவர்கள் பத்து வருடங்களுக்குப் பிறகு ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளதால், இந்நிகழ்ச்சியை திரையுலகமும், ரசிகர்களும், மக்களும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....