பிபிசி ஆவணப்படத்துக்கு தடை கோரிய மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு கலவரம் நடைபெற்றது. இக்கலவரம் நடைபெறும் போது குஜராத் முதல்வராக இருந்தார். இந்தக் கலவரம் தொடர்பாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஊடகமான பிபிசி செய்தி நிறுவனம் சமீபத்தில் ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப் படத்தை கடந்த வாரம் வெளியிட்டது.
இந்த ஆவணப்படம் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இந்த ஆவணப்படத்தை மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது.
இதைத்தொடர்ந்து, பிபிசி ஆவண படத்துக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் பதிவாகின. இதுக்குறித்து தாக்கல் செய்யப்பட்டு வரும் மனுக்களில், “பிபிசியின் ஆவண படத்துக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது அடிப்படை உரிமை மீறல் ஆகும். இந்த தடையை நீக்க வேண்டும். ஆவண படத்தில் பிபிசி வெளியிட்டிருக்கும் ஆதாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’’ என்றும் கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மேற்கண்ட மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் இதர தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், பிபிசி ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு தொடர்பான அசல் ஆவணங்களை, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் நாளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு, இதுதொடர்பான அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அண்ணாமலை பேச்சுக்கு பதில் சொல்ல எனக்கு தகுதி இல்லை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்