05-02-2022 அன்று தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
06-02-2022 அன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
07 -02-2022 முதல் 08-02-2022 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் வறண்ட வானிலையே நிகழும் எனவும் வானிலை ஆய்வு மண்டலத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், காலை வேளையில் இலேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.