Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்- பாமக தலைவர்

    தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால்- பாமக தலைவர்

    சென்னை: சிங்களப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

    வங்கக் கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் அவர்களின் படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக நிகழ்ந்து வருகிறது.

    இந்நிலையில், இது தொடர்பாக இன்று பாமக தலைவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

    வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது.  சிங்களப் படையின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

    கடந்த 12-ஆம் நாள் தான் தமிழக மீனவர்கள் 16 பேரை அவர்களின் இரு படகுகளுடன் சிங்களப் படையினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்கு முன்பாக அடுத்த அத்துமீறலை சிங்களக் கடற்படையினர்  நிகழ்த்தியிருப்பது சற்றும் மனிதநேயமற்ற செயலாகும்.

    வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க  அவர்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை கைது செய்வது இந்தியாவுக்கு விடுக்கப்படும் சவால் ஆகும். அதை நடுவண் அரசு அனுமதிக்கக் கூடாது.

    வங்கக்கடலில் சிங்களப் படையினர் நிகழ்த்தும் அத்துமீறலுக்கு மத்திய அரசு நிரந்தரமாக முடிவு கட்ட வேண்டும். இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களை அவர்களின் படகுகளுடன் உடனடியாக  விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இதனிடையே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அஜித்குமாரின் தந்தை மறைவு; இரங்கல் தெரிவித்த அரசியல் தலைவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....