Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் சம்பவ இடத்திலேயே பெண் பலி

    கரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் சம்பவ இடத்திலேயே பெண் பலி

    கரூரில் வீட்டின் மேற்கூரை இடிந்ததில் லட்சுமி என்பவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    கரூர் மாவட்டம் நெரூர் அருகே உள்ள புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் கந்தசாமி. 75 வயதாகும் இவரின் மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூர்களில் வசித்து வருகின்றனர். 

    இந்நிலையில், கந்தசாமி கடந்த மார்ச் 25 ஆம் தேதி காலையில் விட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். லட்சுமி மட்டும் வீட்டினுள் இருந்துள்ளார். அப்போது காலை 6.30 மணியளவில் திடீரென்று வீட்டின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன.

    இந்த இடிபாடுகளில் சிக்கிய லட்சுமி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

    இதையடுத்து, போலீஸாருடன் அக்கம் பக்கத்தினர் இணைந்து லட்சுமி உடலை மீட்டனர். இதுகுறித்து வாங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லட்சுமியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். இடிந்த வீடு 50 ஆண்டுகள் பழமையான வீடு என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    காலிஸ்தான் அமைப்பினர்களால் சிதைக்கப்பட்ட காந்தி சிலை.. உருவான பதற்றம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....