Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்அஜித்குமார் இல்லாமல் தொடங்கிய ஏகே-61; படம்தான் பேசும் என இயக்குநர் பதிவு!

    அஜித்குமார் இல்லாமல் தொடங்கிய ஏகே-61; படம்தான் பேசும் என இயக்குநர் பதிவு!

    வலிமை திரைப்படமானது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆயினும் வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது. இந்நிலையில், வலிமை திரைப்படத்தை தொடரந்து அஜித்குமார் அவர்கள் மீண்டும் எச்.வினோத் இயக்கத்திலும், போனி கபூர் தயாரிப்பிலும் நடிக்கவிருக்கிறார். 

    இதைப்பற்றிய அதிகார்ப்பூர்வ அறிவிப்புகள் ஏற்கனவே வெளிவந்து பல பேச்சுவார்த்தைகளை ஏற்படுத்தின. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே-61 என்றும் பெயரிடப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்காக அஜித்குமார் அவர்கள் இருக்கும் தோரனை அஜித் ரசிகர்களை மட்டும் இன்றி, அனைத்து தமிழ் திரையுலக ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. 

    இப்படியான சூழலில் ஏகே-61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பே, அஜித்குமார் அவர்களின் 62- ஆவது திரைப்படத்தினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி, அஜித்குமார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இத்திரைப்படத்திற்கு ஏகே-62 என்று பெயரிடப்பட்டுள்ளது. 

    ஏகே-62 திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மேலும், இத்திரைப்படத்திற்கு விக்னேஷ் சிவனின் பிரத்யேக இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    ஏகே-62 திரைப்பட அறிவிப்புகள் வந்தாலும், அஜித்குமார் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு ஏகே-61 திரைப்படத்தின் மீதுதான் தற்போது சூழ்ந்துள்ளது. ஆதலால், ஏகே-61 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மார்ச் மாதம் இறுதி என்று முதலில் சொல்லப்பட படப்பிடிப்பு தொடங்காமல் தள்ளிப்போனது. 

    மீண்டும் எப்போது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்க, அந்த நிகழ்வானது சத்தமே இல்லாமல் நேற்று அரங்கேறியிருக்கிறது. ஆம்! ஏகே-61 படப்பிடிப்பு நேற்று மிகவும் எளிமையான முறையில் ஹைதராபாத்தில் தொடங்கியது. 

    படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதற்காக படக்குழு வெளியிட்டுள்ள புகைப்படத்தில், இயக்குநர் எச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் இருந்தனர். இப்புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட எச்.வினோத், படம்தான் பேசும் என்று குறிப்பிட்டுள்ளார். புகைப்படத்தில் அஜித்குமார் இல்லாதது அவரது ரசிகர்களை சற்று ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. 

    மேலும்,  ஏகே-61 திரைப்படத்தை பொறுத்தவரையில் திரைப்பட படப்பிடிப்புகளை மிக வேகமாக முடித்துவிட்டு, திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடலாம் என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

    இச்செய்தியால், ஏமாற்றமடைந்த அஜித்குமார் ரசிகர்கள் குதூகலம் அடைந்துள்ளனர். சொன்னபடி, ஏகே – 61 தீபாவளிக்கு வெளியானால் தீபாவளி எப்போதும் இல்லாத திருவிழாவாக மாறும் என்பதில் ஐயப்பாடு இல்லை. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....