Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தந்த அஜித்குமார்; இனி வேற மாறிதான்!

    மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுக்கு தந்த அஜித்குமார்; இனி வேற மாறிதான்!

    அஜித்குமார் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆனந்தமான வருடமாகத்தான் இருக்கப்போகிறது. பிப்ரவரி மாதம் வெளிவந்த வலிமை திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை தாண்டி இன்னமும் 300க்கும் அதிகமான திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. சில விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இருக்க அவைகளை படக்குழு மதித்து வரவேற்றது.

    valimai

    வலிமைக்கு பிறகு அடுத்த திரைப்படம் என்ன என்ற கேள்விக்கு பலருக்கு பதில் தெரிந்திருந்தது. ஆம்! வலிமை திரைப்படத்தை இயக்கிய எச்.வினோத் அவர்களுடன் மூன்றாவது முறையாக இணைகிறார், அஜித்குமார். நேர்கொண்ட பார்வை, வலிமை வரிசையில் ஏகே 61 திரைப்படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். அஜித்குமார்- எச்.வினோத் இணையும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    AK 61

    ஏகே 61 திரைப்படத்திற்க்காக அஜித்குமார் அவர்கள் இருக்கும் தற்போதைய  தோற்ற புகைப்படம் பலரையும் கவர்ந்தது. அப்புகைப்படம் அஜித் ரசிகர்களை மட்டும் அல்லாது தமிழ் திரையுலக ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது. இப்படியான கவர்தலால் ஆனந்தத்தில் இருக்கும் அஜித்குமார் ரசிகர்களுக்கு மற்றோரு இன்பமான செய்தியும் கிட்டியுள்ளது. அதனால் தற்போது மிகவும் ஆனந்தத்தில் உள்ளனர், அஜித்குமார் ரசிகர்கள். 

    ajith next film

    ஆம்! அஜித்குமார் அவர்களின் 62 வது திரைப்படம் குறித்து வந்த செய்தியால்  ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். அன்பான இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்கள்தான் அஜித்குமாரின் 62 வது திரைப்படத்தை இயக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்க லைகா நிறுவனம் திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. 

    ajithkumar next film with vignesh sivan

    அனிருத் மற்றும் விக்னேஷ் சிவன் இருவருமே அஜித்குமார் அவர்களின் ரசிகர் என்பதால் திரைப்படம் சிறப்பாக வரும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதே சமயம் விக்னேஷ் சிவனின் முந்தைய திரைப்படங்களை வைத்து பார்க்கும்போது அஜித்குமாரின் 62 வது திரைப்படம் “வேற மாறியாக” இருக்கும் என்றே தோன்றுகிறது.

    வலிமை திரைப்படத்தில் இடம்பெற்ற அம்மா பாடலையும், நாங்க வேற மாறி பாடலையும் எழுதியவர் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....