Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் சிலம்பரசனுடன் இணைகிறாரா, ஐஸ்வர்யா தனுஷ்? - விவரம் உள்ளே!

    நடிகர் சிலம்பரசனுடன் இணைகிறாரா, ஐஸ்வர்யா தனுஷ்? – விவரம் உள்ளே!

    கடந்த ஜனவரி 17 ஆம் தேதி எவரும் எதிர்ப்பார்க்காத வகையில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் தாங்கள் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இருவரின் இந்த அறிவிப்பானது தமிழக திரையுலகிலும், திரையுலக ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அதிர்வலைகள் ஒரு வார காலத்திற்கும் மேல் வீரியம் குறையாமல் தமிழக திரையுலகில் அடித்துக்கொண்டிருந்தது.

    aishwarya dhanush

    படிப்படியாக அதிர்வலைகளின் வீரியம் குறைய, நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்களின் தனிப்பட்ட பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினர். நடிகர் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தொடர்ந்து கலந்துக்கொண்டு நடித்தார். மற்றொரு புறம் ஐஸ்வர்யா அவர்கள் ‘பயணி’ என்ற காதல் காணொளி பாடல் ஒன்றை இயக்கினார். 

     

    இப்படியாக இருவரும் தங்கள் பணிகளில்  மும்முரமாக இருக்க,  ஐஸ்வர்யா அவர்கள் உடற்சோர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது உடற்சோர்வு நீங்கி மீண்டும் தன் பணிகளில் ஈடுபட்டுள்ளார், ஐஸ்வர்யா. மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்று இணையத்தில் வைரலாகி வந்தது. அதேப்போல் தனுஷ் அவர்கள் தன் மகன் யாத்ராவுடன் எடுத்த புகைப்படமொன்றும் இணையத்தில் வைரலானது. 

     

     

    View this post on Instagram

     

    A post shared by Dhanush (@dhanushkraja)

    இருவரின் தொழில் சமந்தமான வாழ்வும் இப்படியாக நிலவ, ஐஸ்வர்யா அவர்கள் தற்போது தான் இயக்கவிருக்கும் திரைப்படத்திற்கான திரைக்கதையை தயார் செய்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இக்கதையில் மாஸ் நாயகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்குமென்று தயாரிப்பாளர் கூறியுள்ளார் என்று தகவல்கள் கசிந்துள்ளது. அதேசமயம்,  தயாரிப்பாளர் சிம்புவின் பெயரை பரிந்துரைத்துள்ளதாகவும் தெரிகிறது. 

    Maanadu

    இதனால், சிம்புவை வைத்து தனது புதிய படத்தை ஐஸ்வர்யா அவர்கள் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  மேலும் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் உலா வந்த வண்ணம் உள்ளன. சிம்பு திரையுலகை பொறுத்தவரையில் தனுஷ் அவர்களின் போட்டியாளராக காணப்பட்டு வருவதை நாம் அனைவரும் அறிந்ததே!

    மேலும், தனுஷ் அவர்களின் தந்தை கஸ்தூரி ராஜா, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதியினர் இன்னமும் அதிகாரப்பூர்வமாய் விவாகரத்து பெறவில்லை என்று கூறியதும், ஐஸ்வர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தற்போதும் ‘ ஐஸ்வர்யா தனுஷ் என்ற பெயரை வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....