Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்5 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சென்ற ஓரியன் விண்கலம்.!

    5 நாள் பயணத்திற்கு பிறகு நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சென்ற ஓரியன் விண்கலம்.!

    5 நாட்கள் பயணத்திற்கு பிறகு ஓரியன் விண்கலம் நிலவினை சுற்றி தனது சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சென்றுள்ளது. 

    நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ஆராய்ச்சிகளை நாசா மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஓரியன் விண்கலத்தின் மூலம் மனித வடிவிலான பொம்மைகளை அனுப்பி சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. பொம்மைகளுக்கு பொருத்தப்பட்டுள்ள தோல்கள் அங்குள்ள கதிர்வீச்சை எவ்வாறு தாங்குகின்றன என்பதை கண்டறியவே இந்தச் சோதனை திட்டம் ஆகும். 

    ஆர்டெமிஸ் 1 என்ற இந்த திட்டத்தில், கடந்த ஆகஸ்ட் மாதம் எஸ்.எல்.எஸ் ராக்கெட் மூலம் ஓரியன் விண்கலம் அனுப்ப திட்டமிடப்பட்டது. இருப்பினும் தொழில் நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலையின் காரணமாக 3 முறை இந்தத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, இந்த மாதம் 16 ஆம் தேதி ஆர்டெமிஸ் 1 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.  விண்ணில் செலுத்தப்பட்ட 8 நிமிடங்களுக்கு பிறகு, ராக்கெட் தனியாக பிரிந்து ஓரியன் விண்கலம் நிலவை நோக்கி பயணித்தது. ஓரியன் விண்கலம் பூமியிலிருந்து 57 ஆயிரம் மைல் தொலைவில் இருந்து பூமியை படை பிடித்து அனுப்பியது. ஓரியன் விண்கலத்தில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 

    இந்நிலையில் 5 நாட்கள் பயணித்த ஓரியன் விண்கலம், நிலவை சுற்றிய தனது சுற்று வட்டப்பாதைக்கு அருகில் சென்றுள்ளது. மேலும் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைவதற்கு தேவையான வேகத்தை ஓரியன் விண்கலம் எடுத்து வருகிறது. 

    இந்த ஆர்டெமிஸ் 1 பயணத்தின் 6-வது நாளில் ஓரியன் தனது 4-வது சுற்றுப்பாதைத் திருத்தி, துணை இயந்திரங்களை பயன்படுத்தி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 

    இதனிடையே 2.30 லட்சம் மைல் தொலைவிலிருந்து பூமியை ஓரியன் விண்கலம் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது. 

    வருகிற நவம்பர் மாதம் 21 ஆம் தேதி மற்றும் 25 ஆம் தேதி நிலவின் மேற்பரப்புக்கு அருகில் 60 ஆயிரம் மைல் தொலைவில் செல்லும் ஓரியன் விண்கலம் டிசம்பர் 11 ஆம் தேதி பூமிக்கு திரும்புகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....