Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் மகேஷ்பாபு கன்னத்தை பதம் பார்த்த கீர்த்தி சுரேஷ்! - நடந்தது என்ன?

    நடிகர் மகேஷ்பாபு கன்னத்தை பதம் பார்த்த கீர்த்தி சுரேஷ்! – நடந்தது என்ன?

    சினிமா உலகில், அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சினையோ, கிசுகிசுவோ வந்து கொண்டே இருப்பது தான் வழக்கம். அந்த விதத்தில், தெலுங்கு சினிமாவில் மிகவும் வேடிக்கையான ஒரு சம்பவம் நடந்துள்ளது‌. தெலுங்கு சினிமாவில், மிகப் பிரபலமான நடிகர் தான் மகேஷ் பாபு. இவரின் நடிப்புத் திறன் மிகவும் எதார்த்தமாக இருப்பதே, இவரது வெற்றிக்கு காரணம்.

    தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் கன்னத்தில், பளார் என்று அறைந்துள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர், தன் தவறை உணர்ந்து, தான் செய்த செயலுக்காக வருந்திய பிறகு, மகேஷ்பாபுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இச்சம்பவம் தெலுங்கு சினிமாவில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் எப்படியோ, அப்படித் தான் தெலுங்கில் மிகப் பிரபலமான நடிகர் மகேஷ்பாபு. இவர் சமீப காலமாக ‘சர்காரு வாரி பாடா’ என்கிற திரைப்படத்தில், கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி அன்று வெள்ளித் திரைக்கு வரவுள்ளது. திரையிடும் தேதி நெருங்கி விட்டதால், இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது.

    சர்காரு வாரி பாடா திரைப்படத்தின், பாடல் காட்சிக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. அப்பாடல் காட்சியில், நடித்தபோது மகேஷ்பாபுவின் கன்னத்தில் தவறுதலாக அறைந்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். பிரபலமான தெலுங்கு நடிகர் முகத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டதும் படப்பிடிப்புக் குழுவில் இருந்த அனைவரும் அதிர்ந்து போயினர். சில நேரம் வரையில் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    பின்னர், தன் தவற்றை உணர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ், மகேஷ்பாபுவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதனால், ஒன்றும் இல்லை என்றும், தெரியாமல் செய்தது தானே என்றும் மிச் சாதாரணமாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் மிகவும் பிரபலமான நடிகரின் கன்னத்தில், கவனக்குறைவால் இப்படி செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வோடு இருந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ஆகையால், மீண்டும் மீண்டும் மகேஷ்பாபுவிடம் சென்று, முறை மன்னிப்பு கேட்டிருக்கிறார், நடிகை கீர்த்தி சுரேஷ்.

    ‌ஆனால், இந்த சிறிய விஷயத்தைப் பெரிதுபடுத்தாத நடிகர் மகேஷ்பாபு, அதெல்லாம் ஒன்றும் இல்லை. அதற்காக நீங்கள் வருந்த வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். அதன் பிறகு தான், படப்பிடிப்புத் தளத்தில் பதட்டம் குறைந்து, சாதாரண சூழல் நிலவியது.

    இதையும் படிங்க; அஜித்குமாரின் இந்த மென்மையை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....