Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தீபாவளியைக் குறி வைக்கும் 'சர்தார்': கார்த்தி படம் குறித்து முக்கிய தகவல்!

    தீபாவளியைக் குறி வைக்கும் ‘சர்தார்’: கார்த்தி படம் குறித்து முக்கிய தகவல்!

    தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதில் எந்த அளவிற்கு ஆர்வம் இருக்கிறதோ, அதே அளவு ஆர்வம் அன்றைய தினத்தில் திரைக்கு வரும் புதுப்படத்திற்கும் உண்டு. புதுப்படங்களை வரவேற்கும் முக்கிய நாட்களில் தீபாவளியும் ஒன்று. தீபாவளிக்கு பொதுவாகவே குறைந்தது 5 திரைப்படங்களாவது திரைக்கு வந்து விடும். இந்நிலையில் கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது. கார்த்தி நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் படம் தான் சர்தார். இப்படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால், குறித்த நேரத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழு முடிவெடுத்துள்ளது. நடிகர் விஷால் நடித்த, ‘இரும்புத்திரை’ படத்தை இயக்கியவர் தான் பி.எஸ்.மித்ரன்.

    இரும்புத்திரையின் கதையம்சம் நிகழ்கால வங்கிக் கடன்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதால், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனால், பி.எஸ். மித்ரனின் திரைப்படமான ‘சர்தார்’ மீதும் எதிர்ப்பார்ப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிப்பது, கார்த்திக்கு இது புதிதல்ல. இதற்கு முன்பு, தெலுங்கு படத்தின் தழுவலாக தமிழில் எடுக்கப்பட்ட சிறுத்தை திரைப்படத்தில், கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். இப்படமும் கார்த்தியின் திரைப்பயணத்தில் வெற்றிப்படமாக அமைந்தது.

    சர்தார் படத்தில் ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, புதிய கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் முற்றிலும் வித்தியாசமான கெட்டப்பில் கார்த்தி நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பல கட்டங்களாக நடைபெற்று தற்போது, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

    இந்நிலையில், இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை, வரும் தீபாவளிக்கு திரையிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும், இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் இந்த அப்டேட், கார்த்தியின் ரசிகர்களுக்கு இரட்டை தீபாவளி என்று தான் சொல்ல வேண்டும்.

    இயக்குனர் செல்வராகவன் எழுதிய பாடலா இது? இப்படி அசத்தியிருக்கிறாரே…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....