Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மரகத நாணயத்தால் காதலில் விழுந்த நடிகரும் நடிகையும்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

    மரகத நாணயத்தால் காதலில் விழுந்த நடிகரும் நடிகையும்; ரசிகர்கள் வாழ்த்து மழை!

    ஈரம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பலரையும் கவர்ந்தவர், ஆதி. அதன்பின்பும் முன்பும் பல திரைப்படங்கள் நடித்தாலும் இன்றுவரை ஈரம் திரைப்படம்தான் ஆதியின் விலாச திரைப்படமாக இருக்கிறது. 

    ஈரம் திரைப்படம் தவிர்த்தும் தரமான திரைப்படங்களில் ஆதி அவர்கள் நடித்துள்ளார்.

    அவையாவன;
    • மிருகம்
    • அரவான்
    • யாகவராயினும் நாகாக்க
    • மரகத நாணயம்
    • ரங்கஸ்தளம்
    • யூ டர்ன்
    • க்ளாப்

    மேல்சொன்னப் பட்டியலில் இருக்கும் திரைப்படங்களை பார்த்தவர்களில் பலருக்கும் பிடித்தமான திரைப்படமாக ‘மரகத நாணயம்’ எனும் திரைப்படம் இருக்கும்.

    முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவால் நிறைந்து பார்த்தவர்களை விடாமல் சிரிக்க வைத்த திரைப்படமாகவே மரகத நாணயம் தற்போதும் இருந்து வருகிறது. மரகத நாணயம் திரைப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் என்பவர் இயக்கியிருந்தார். 

    இத்திரைப்படத்தில், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், மைம் கோபி, கோட்டா சினிவாச ராவ், எம். எஸ். பாஸ்கர், காளி வெங்கட், சங்கிலி முருகன், கார்திசனா, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் நடித்திருப்பர். இந்தப் பட்டாளத்தை வைத்துக்கொண்டே நீங்கள் கணக்கிட்டு விடலாம் இத்திரைப்படத்தில் நகைச்சுவைதான் பிராதனம் என்பதை. 

    காதல் 

    இத்திரைப்படத்தில் நடித்த கதாநாயகன் ஆதிக்கும், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த நிக்கி கல்ராணி அவர்களுக்கும் காதல் அரும்பியுள்ளது. காதலர்களாக சுற்றி வந்தவர்கள் சமீபத்தில் தங்களின் நிச்சயதார்த்த நிகழ்வை அரங்கேற்றியுள்ளனர். 

    இந்நிகழ்வுக்கு திரைத்துறையினர் மட்டும் அல்லாது ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆதியும் நிக்கி கல்ராணி அவர்களும் மரகத நாணயம் திரைப்படத்திற்கு முன்பே யாகவராயினும் நாகாக்க என்ற திரைப்படத்தில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இருப்பினும் மரகத நாணயம் திரைப்படத்தின் மூலம்தான் இருவரும் காதல் வசம் சரணடைந்தனர் என்று கூறப்படுகிறது. 

    மரகத நாணயத்தில் இடம்பெற்றுள்ள நீ கவிதைகளா பாடலுக்கு பிரத்யேக ரசிக கூட்டம் இருந்து வரும் நிலையில், மற்ற எவரை விடவும், இப்பாடலின் ரசிகர்கள் இவர்களின் காதலின் மூலம் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. 

    நீ கவிதைகளா…

    மரகத நாணய படத்தின் சூழல்படி கதாநாயகன் ஆதி, நிக்கி கல்ராணி அவர்களை ஒருதலையாக காதலிப்பார். ஆனால் அதற்குள் நிக்கி கல்ராணி அவர்களுக்கு நிச்சயமும் முறையே திருமணமும் நிகழ்ந்து விடும். இச்சமயத்தில் கதாநாயகன் ஆதியின் மன உணர்வை நீ கவிதைகளா பாடல் கூறிய விதம் பலருக்கும் பிடித்தமான ஒன்றாகும். பாடல் வரிகளும் சரி , பிரதிப் குமாரின் குரலும் சரி கதாநாயகனின் மன உணர்வை நம்மிடம் கடத்த இசைக்கு ஏதுவாகின. 

    இவ்வளவு ஏன்? நடிகர் ஆதி-நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தங்களின் நிச்சயதார்த்த நிகழ்வின் சிறு பகுதியை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அக்காணொளியின் பின்னணியில் ஒலிப்பது நீ கவிதைகளா பாடல்தான்.  

     

    மரகத நாணயம் என்ற திரைப்படம் அழகிய காதலை மலரச்செய்துள்ளது. மரகத நாணயம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள நீ கவிதைகளா பாடல் பலரின் காதலுக்கும் ஏதுவாக இருந்து வருகிறது. 

    தினவாசல் சார்பாக நடிகர் ஆதி – நடிகை நிக்கி கல்ராணி இல்வாழ்க்கைக்கு நல்வாழ்த்துகள்!

    நீ கவிதைகளா பாடல்- https://www.youtube.com/watch?v=pVkDZueTBpY

    இதையும் படிங்க; திரைத்துறையிலிருந்து விலகுவதாக பிரபல நடிகர் அமீர்கான் கூறல் – நடந்தது என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....