Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை அம்பத்தூரில் தீ விபத்து... வழக்குப் பதிந்த காவல்துறை

    சென்னை அம்பத்தூரில் தீ விபத்து… வழக்குப் பதிந்த காவல்துறை

    சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் எரிவாயு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

    சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான தொழில் வளாகம் இருக்கிறது. இந்த வளாகத்தில் எரிவாயு நிறுவன அலுவலகம், கட்டுமான அலுவலகம் மற்றும் ரசாயன குடோன் போன்றவை செயல்பட்டு வருகிறன. 

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், காவலாளி செல்வராஜ் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்த எரிவாயு நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ பிடிப்பு ஏற்பட்டது. 

    இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 2 மணி நேர போராட்டதிற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

    இந்தத் தீ விபத்தில் எரிவாயு நிறுவன அலுவலகத்தில் இருந்த ஆவணங்களும் பொருள்களும் சேதம் ஆகின. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. 

    இந்தத் தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    ஆஸ்திரேலியாவில் சூறையாடப்பட்ட இந்து கோயில்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....