சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் எரிவாயு நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ராம்குமார் என்பவருக்கு சொந்தமான தொழில் வளாகம் இருக்கிறது. இந்த வளாகத்தில் எரிவாயு நிறுவன அலுவலகம், கட்டுமான அலுவலகம் மற்றும் ரசாயன குடோன் போன்றவை செயல்பட்டு வருகிறன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், காவலாளி செல்வராஜ் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். இதையடுத்து நேற்று அதிகாலை 2 மணி அளவில் தொழிற்பேட்டை வளாகத்தில் இருந்த எரிவாயு நிறுவன அலுவலகத்தில் திடீரென தீ பிடிப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், 2 மணி நேர போராட்டதிற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்தத் தீ விபத்தில் எரிவாயு நிறுவன அலுவலகத்தில் இருந்த ஆவணங்களும் பொருள்களும் சேதம் ஆகின. மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்தத் தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
A fire broke out at the office of a gas company at Ambattur Industrial Estate late Tuesday night. The police said that there were no casualties. As the cylinders were kept in a separate place, a major mishap was averted. @Selvaraj_Crime pic.twitter.com/tEET2SAiWy
— A Selvaraj (@Crime_Selvaraj) January 18, 2023
ஆஸ்திரேலியாவில் சூறையாடப்பட்ட இந்து கோயில்..