கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் சிற்பக்கலை கூட்டத்திற்குள் நுழைந்த நாகப்பாம்பை கடித்து குதறிய நாயின் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சீதாராம் நகர் பகுதியில் இருக்கும் ரிங் ரோடு அருகே ஸ்ரீ வைஷ்ணவி சிற்பக்கலைக் கூடம் உள்ளது. இந்தச் சிற்பக் கலைக்கூடத்தில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது அங்கு அருகே இருக்கும் மலையில் இருந்து வெளியேறிய நாகப்பாம்பு ஒன்று சிற்ப கலைக்கூடத்திற்குள் புகுந்தது. இதைப்பார்த்த அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், சிற்பக்கூடத்தில் வளர்க்கப்பட்டு வந்த நாய், அங்கு வந்த பாம்பினை கடித்தது. மேலும் நாகப்பாம்பு படம் எடுத்து அந்த நாயை தீண்ட முயன்றது.
இதைத்தொடர்ந்து நாகப்பாம்புக்கும் நாய்க்கும் பயங்கர சண்டை ஏற்பட்டது. இந்தச் சண்டையில் நாகப்பாம்பு அங்கேயே சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இந்தச் சம்பவம் காரணமாக சிற்பக்கலை கூடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிகிச்சைப் பெற்று வந்த யானை; திடீரென உயிரழந்த சோகம்…