புதுச்சேரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தின் மையப்பகுதியான புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை இந்திராகாந்தி சதுக்கம் அருகே சொகுசு கார் ஒன்று வில்லியனூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து ஓட்டுநர் காரை சாலையில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதைத்தொடர்ந்து இன்ஜினில் இருந்த தீயானது வேகமாக கார் முழுவதும் பரவியது.
உடனே அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயையை அணைத்து காரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்தச் சம்பவத்தின்போது அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில், தீப்பற்றி எரிந்த சொகுசு கார் ரெயின்போ நகர் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் விஷ்ணு வரதன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவரது ஓட்டுநர் ஜீவா காரை சர்வீஸ் செய்ய எடுத்து வந்ததும், அப்போது பேட்டரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியீடு; மார்ச் 31-ஆம் தேதி தொடக்கம்!