Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமீனம்பாக்கம் விமான நிலையத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

    சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 55 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

    சென்னை, மீனப்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், சுங்கத்துறை அதிகாரிகள் விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். 

    அப்படி சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த இளைஞரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் முன்னுக்குபின் முரணாக பேசியதால், அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 

    அந்தச் சோதனையில், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 54.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளைஞரை கைது செய்து, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ‘அந்த வீடு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது பெயரில் பினாமியாக வாங்கியது’ – விசாரணையில் அதிர்ச்சி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....